"மத்திய அரசின் நோக்கம்".. பிரதமர் சுவாரசிய பேச்சு

Update: 2024-02-22 10:44 GMT

விவசாயிகள் நலனை தடுக்கும் வகையில் பாஜக அரசு செயல்படவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் நடந்த கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்வது இந்தியா என்றும் கடந்த 10 ஆண்டுகளில் பால் உற்பத்தி சுமார் 60 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் கூறினார். நாடு முழுவதும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகளை மத்திய அரசு அமைத்திருப்பதாகவும், இது விவசாயிகளுக்கு பயன்படுவதோடு மட்டுமின்றி கிராமப்புற பொருளாதாரத்தையும் வலுப்படுத்துவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். நாட்டில் உள்ள சிறு விவசாயிகளை, நவீன தொழில்நுட்பத்துடன் இணைப்பதே மத்திய அரசின் நோக்கம் எனவும் சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்