கொந்தளித்த ஈபிஎஸ்... எக்ஸ் தளத்தில் பரபரப்பு பதிவு | EPS | TN Police
#EPS #TNPolice #ThanthiTv
கும்பகோணத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாகவும், சென்னை கண்ணகி நகர் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவலர்கள் இருவரை போதை ஆசாமிகள் இருவர் தாக்கியதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன என்று, தமது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவல்துறையினருக்குமே பாதுகாப்பற்ற நிலை இருப்பதாவும், போதைப்பொருள் புழக்கத்தால் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.