அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

Update: 2023-11-30 13:33 GMT

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட விவகாரத்தில், கே.சி.பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த‌து. ஆனால், இந்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை தொடர நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்நிலையில், இதற்கு எதிராக ஈபிஎஸ் மேல்முறையீடு செய்தால், தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என்று, கே.சி.பழனிசாமி சார்பில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்