அதிர வைத்த குண்டுவெடிப்பு சம்பவம் - DK .சிவக்குமார் சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-03-03 11:42 GMT

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. அரசியல் செய்து வருவதாக, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியின்போது நடந்த சம்பவங்களை மறந்துவிட்டு அவர்கள் பேசுவது வெட்கக்கேடானது என்றும் தெரிவித்தார். பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணை சுதந்திரமாக நடைபெற அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த சமயத்தில் பொதுமக்களிடையே ஒற்றுமை மற்றும் அமைதி மிகவும் அவசியம் என்றும் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்