"பாஜக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு.." மத்திய அமைச்சர் சுவாரசிய பேச்சு | BJP | Thanthitv

Update: 2024-03-23 05:34 GMT

மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட புரசைவாக்கம் பகுதியில் பாஜக கூட்டணி தேர்தல் பணிமனை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

இதில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கலந்து கொண்டு தேர்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் வேப்பேரி பகுதியில்

நடந்த தச்சின் பாரத் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் மீது பிரதமர் மோடி தனி அக்கறை கொண்டிருப்பதாக கூறினார். பல வகையான தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளதாக

அவர் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் தூய்மையான நிர்வாகம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பாஜக அரசு மீதி எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் கிடையாது என்றும் அமைச்சர் அனுராக் சிங் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்