முதலமைச்சர், அவரது குடும்பத்தை தரக்குறைவாக பேசியதாக அதிமுக தலைமை கழக பேச்சாளர் மீது வழக்குப்பதிவு

Update: 2024-04-28 02:00 GMT

ஓமலூர் காவல் நிலையத்தில் அதிமுக தலைமை கழக பேச்சாளர் கோவை காளிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக சேலம் புறநகர மாவட்டத்தின் சார்பில் கடந்த ஆண்டு தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தலைமை கழக பேச்சாளர் கோவை காளிதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது,முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தை தரக்குறைவாக பேசியதாக கூறி வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்