துணை ராணுவ படையினர் குவிப்பு - டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பரபரப்பு
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக பாஜக மாணவர் அமைப்பினர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் முன் போராட்டம் நடத்த போவதாக தகவல் வெளியானது.
இதனைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.