அதிமுக அலுவலகத்தில் மீண்டும் ஒருவர் மீது தாக்குதல்

அதிமுக தலைமை அலுவலகத்தில், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் ஒருவர் தாக்கப்பட்டார்.

Update: 2021-12-04 13:59 GMT
அதிமுக தலைமை அலுவலகத்தில், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் ஒருவர் தாக்கப்பட்டார். வியாசர்பாடியைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் அதிமுக தலைமை அலுவலகம் அருகே நின்றிருந்தார். அவரை பார்த்து சந்தேகித்த அதிமுக தொண்டர்கள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். வேட்பு மனு தாக்கல் செய்யவந்தவர் என நினைத்து தொண்டர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. அங்கிருந்த சில தொண்டர்கள், விஜயகுமாரை  பாதுகாப்பாக மீட்டு சென்றனர். தாக்கப்பட்ட விஜயகுமார் வடசென்னை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் ஆவார். மாவட்ட செயலாளர் ராஜேஷ் தூண்டுதலின்பேரில் தான் தாக்கப்பட்டதாக வழக்கறிஞர் விஜயகுமார் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்