கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு - கூட்டணியில் சேர கமலுக்கு சரத்குமார் அழைப்பு

தங்களது அணியில் சேர, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார் சரத்குமார்...

Update: 2021-02-27 11:07 GMT
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சரத்குமார், திமுகவில் இருந்து விலகிய ஐஜேகே உடன் சேர்ந்து, புதிய அணியை உருவாக்கி உள்ளார். "மாற்றத்திற்கான புதிய அணி" தங்கள் அணி என்று கூறியுள்ள சரத்குமார் இன்று காலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசானை சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தங்கள் அணியில் சேருமாறு கமலுக்கு சரத்குமார் அழைப்பு விடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒத்த கருத்து உடையவர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என்பதன் அடிப்படையில் கமலுக்கு அழைப்பு விடுத்ததாக கூறினார்..


Tags:    

மேலும் செய்திகள்