வேளாண்மசோதாவுக்கு எதிர்ப்பு - வரும் 24-ந்தேதி நாடு தழுவிய போராட்டம்

நாடாளுமன்ற இரு அவைகளிலும் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

Update: 2020-09-21 16:34 GMT
காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் மூத்தத் தலைவர் ஏ.கே. அந்தோணி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரியங்கா காந்தி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி, வருகிற 24-ந் தேதி முதல் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்