பாதுகாப்பு துறை தொடர்பான தயாரிப்புகளை அதிகப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி
ஆத்ம நிர்பர், திட்டத்தின் கீழ் பாதுகாப்பு தொடர்பான சாதனங்களை, தயாரிப்பது தொடர்பான கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
ஆத்ம நிர்பர், திட்டத்தின் கீழ் பாதுகாப்பு தொடர்பான சாதனங்களை, தயாரிப்பது தொடர்பான கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், பாதுகாப்புத்துறையில், இந்தியா பல ஆண்டுகளாக இறக்குமதி செய்து வரும் நாடாகவே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்றார்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு துறை தொடர்பான தளவாடங்களின் இறக்குமதி பட்டியல் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.