"பதவிக்காக தத்துவத்தை சமரசம் செய்து கொண்டவர்கள்" - சிவசேனா மீது மத்திய அமைச்சர் கட்கரி சாடல்
முதலமைச்சர் பதவிக்காக சிவசேனா தனது தத்துவங்களில் சமரசம் செய்து கொண்டதாக மத்திய அமைச்சர் நிதின்கட்காரி குற்றம்சாட்டி உள்ளார்.
முதலமைச்சர் பதவிக்காக சிவசேனா தனது தத்துவங்களில் சமரசம் செய்து கொண்டதாக மத்திய அமைச்சர் நிதின்கட்காரி குற்றம்சாட்டி உள்ளார். நாக்பூரில் கட்சி கூட்டத்தில் பேசிய அவர், மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் பெறவே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளதாகவும் கட்கரி தெரிவித்தார். இந்துத்துவா கட்சி போல தன்னைக் காட்டிக் கொள்ள சிவசேனா முனைந்தாலும், அதன் நடவடிக்கைகளில் காங்கிரசின் சாயல்கள் வெளிப்படுவதாகவும் கட்கரி சாடியுள்ளார்.