வாஜ்பாயின் 95வது பிறந்தநாள் கொண்டாட்டம் - "ரோக்டாங் சுரங்கபாதைக்கு வாஜ்பாய் பெயர்"

மறைந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 95வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள நினைவகத்தில் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Update: 2019-12-25 10:42 GMT
மறைந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 95வது பிறந்தநாளையொட்டி  டெல்லியில் உள்ள நினைவகத்தில் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லா மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் நினைவகத்தில் மரியாதை செலுத்தினர். இந்நிலையில், உலகின் மிக நீளமான சுரங்கபாதைகளில் ஒன்றான இமாச்சல் பிரதேசத்தில் உள்ள ரோக்டாங் சுரங்கப்பாதைக்கு அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயரை மத்திய அரசு சூட்டியுள்ளது. இந்த சுரங்கபாதை கட்டும் திட்டத்தை வாஜ்பாய் தனது ஆட்சி காலத்தில் செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்