"ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ
"பிரதமரை, தமிழக முதல்வர் சந்திக்கும் போது வலியுறுத்துவார்";
குடியுரிமை சட்டத்தினால் ஈழத்தமிழர்களுக்கு பாதிப்பு வரும் என்ற நிலை வந்தாலும் கூட அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கருத்தினை அதிமுக முன்வைப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.