"ஹைட்ரோ-கார்பன் கிணறு தோண்ட தடை வேண்டும்" - மக்களவையில் கோரிக்கை விடுத்த நாகை எம்.பி.

நாகை மாவட்டத்தில், ஹைட்ரோ-கார்பன் கிணறுகள் தோண்ட தடை விதிக்க வேண்டும் என, மக்களவையில் எம்.பி. செல்வராஜ் கோரிக்கை விடுத்தார்.

Update: 2019-06-27 13:52 GMT
நாகை மாவட்டத்தில், ஹைட்ரோ-கார்பன் கிணறுகள் தோண்ட தடை விதிக்க வேண்டும் என, மக்களவையில் எம்.பி. செல்வராஜ் கோரிக்கை விடுத்தார். நாகை மாவட்டத்தில், விவசாயம் மற்றும் மீன் வளத்தை தங்கள் தொழில் ஆதாரமாக நம்பியுள்ளதாக கூறிய அவர், இங்கு ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதிக்கபடுமேயானால் நீர் மற்றும் நில வளம் பாதிக்கப்படும் என்ற அச்சம் இருப்பதாக தெரிவித்தார். எனவே, மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்