காங். வேட்பாளர் வெற்றிக்கு கிரண்பேடியும் காரணம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

Update: 2019-05-27 11:29 GMT
புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. நினைவு தின கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், வெற்றி பெற்றதன் மூலம் காங்கிரஸ்  அரசு மீது புதுச்சேரி மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதை காட்டுவதாக தெரிவித்தார். வைத்திலிங்கம் வெற்றி பெற்றதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் ஒரு காரணம் என சூசகமாக தெரிவித்தார்.மத்திய அரசை நம்பிதான் புதுச்சேரி மாநிலம் உள்ளது என்றும், பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பேன் என்றும் அவர் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்