சபரிமலை விவகாரம் - "தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும்" - பாஜக வேட்பாளர் கும்மணம் ராஜசேகரன்

சபரிமலை விவகாரத்தால் கேரளாவில் வாக்கு பதிவு சதவீதம் உயர்ந்துள்ளதாக திருவனந்தபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் கும்மணம் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-16 13:26 GMT
சபரிமலை விவகாரத்தால் கேரளாவில் வாக்கு பதிவு சதவீதம் உயர்ந்துள்ளதாக திருவனந்தபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் கும்மணம் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது  நாடாளுமன்ற தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வாக்கு சதவீதம் ஏழு சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். இது பக்தர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக அமையும் என்றும் அவர் கூறினார். தேர்தல் முடிவுகள் பக்தர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்