"தங்க தமிழ்செல்வனின் கருத்து யதார்த்தமானது" - தினகரன் பேச்சு

சட்டமன்ற இடைத்தேர்தல் சூலூர் தொகுதி அமமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூலூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

Update: 2019-05-09 01:35 GMT
சட்டமன்ற இடைத்தேர்தல் சூலூர் தொகுதி அமமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூலூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கின்ற திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தங்க தமிழ்செல்வனின் கருத்து யதார்த்தமானது என்று கூறிய அவர் விரைவில் அதிமுக ஆட்சி கலைவது உறுதி என்றும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்