வெற்றி பெற்றால் விருத்தாச்சலம் தனி மாவட்டமாக மாற்றப்படும் - கமல்

மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கமல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-11 09:42 GMT
காவல்துறை ஏவல்துறையாக மாறாமல் இருந்தால் தான், குற்றங்கள் குறைந்து, மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கடலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட அவர், மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்