உப்பளத்தில் வாக்கு சேகரித்த தமிழிசை...

பா.ஜ.க. வேட்பாளர் தூத்துக்குடி தொகுதி தமிழிசை உப்பளத் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

Update: 2019-04-10 09:18 GMT
தூத்துக்குடி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை, உப்பளத் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார். உப்பளத்துக்கு சென்ற அவர், அங்குள்ள ஆண், பெண் வாக்காளர்களின் குறைகளை கேட்டறிந்தார். கூடையில் உப்பு அள்ளிய அவர், தொழிலாளர்களுக்கு சுமைகளை தூக்க உதவி புரிந்தார். அங்குள்ள களநிலவர பிரச்சினைகளை தொழிலாளர்களிடம் கேட்டறிந்த அவர், உப்பை அள்ளி பரிசோதித்தார். பல்வேறு இடங்களுக்கு சென்று வாக்கு சேகரித்த அவர், உப்பளத்துக்கு சென்றது அங்குள்ள தொழிலாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்