கொடநாடு விவகாரத்தில் திமுக மீது மக்களுக்கு சந்தேகம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கொடநாடு கொள்ளை விவகாரத்தில், திமுக மீதே மக்களுக்கு சந்தேகம் திரும்பி உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வேலூர் வள்ளலார் பகுதியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின், கடவுள்களை கொச்சைப்படுத்துவதாக குற்றம் சாட்டிய முதலமைச்சர் பழனிசாமி, கொடநாடு கொள்ளை விவகாரத்தில், திமுக மீதே மக்களுக்கு சந்தேகம் திரும்பி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.