தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: ஈ.வி.கே.எஸ் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் - விசாரணை 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக, சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜரானார்.

Update: 2019-03-21 07:19 GMT
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று மாலை அல்லது நாளைக்குள் வெளியாகும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக, சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜரானார். அவருக்கு வழக்கின் நகல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, விசாரணை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அங்கு செய்தியாளரிடம் பேசிய அவர், போட்டியிட வாய்ப்பு தராவிட்டாலும் பிராசாரம் செய்வேன் என்று கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்