முதலமைச்சர் சந்தித்த தேமுதிக வேட்பாளர்கள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தேமுதிக வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Update: 2019-03-19 01:26 GMT
தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சியில் எல்.கே.சுதீஷ், திருச்சியில் இளங்கோவன், விருதுநகரில் அழகர்சாமி, வடசென்னையில் மோகன்ராஜ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அவர்கள் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அவர்களது இல்லங்களில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் அமைச்சர் வேலுமணி இல்லத்திற்கு சென்ற அவர்கள் அமைச்சர்கள் வேலுமணி தங்கமணி, மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இதற்கிடையே அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியும் மூன்று அமைச்சர்களையும் சந்தித்து பேசினார்.

பாஜக அலுவலகம் சென்ற தேமுதிக வேட்பாளர்கள் - தமிழிசை சவுந்தர ராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்



இதே போல எல்.கே சுதிஷ், அழகாபுரம் மோகன்ராஜ், அழகர்சாமி, டாக்டர் இளங்கோவன் ஆகியோர் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை, சென்னை திநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் தமிழிசையை சந்தித்து வாழ்த்து பெற்றதாக கூறிய சுதீஷ், திருச்சிக்கு பிரச்சாரத்திற்காக பிரதமர் வந்தால் நல்லது என்று வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். அப்போது எல்லா தொகுதிகளிலும் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என்று அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்