தனியார் பால் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தனியார் பால் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் உள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியிருந்தார்.

Update: 2019-01-30 13:56 GMT
அமைச்சரின் புகாருக்கு ஆதாரம் இல்லை என்று கூறி  3 பால் உற்பத்தி நிறுவனங்கள்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 'ஆதாரம் இல்லாமல் தனியார் பாலில் கலப்படம் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச கூடாது' என தடை விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில்தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை  ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்