புயல் பாதிப்பு : உடனடியாக ரூ. 41 கோடி நிவாரணம் விடுவிப்பு - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை தலைமைச் செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை மீனவ பிரதிநிதிகள் சந்தித்தனர்.

Update: 2018-12-03 11:10 GMT
கஜா புயலில் சேதமடைந்த படகுகளுக்கான இழப்பீட்டை இரட்டிப்பாக உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மீனவர்களுக்கு 41 கோடி ரூபாய் நிதி உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கினால், நிவாரண தொகை உயர்த்தி வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்