"கஜா புயல்: மத்திய அரசு தொடர்ந்து உதவி வருகிறது" - தமிழிசை சவுந்தரராஜன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல வழிகளில் உதவி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள், தென்னை சார்ந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய தேவையான மின்சாரத்தை வழங்க நிதி ஒதுக்கியதாக கூறினார். மேலும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மத்திய அரசு வழங்கி வருவதாக தெரிவித்தார்.