போனஸ் தொகைக்காக துயரத்தோடு போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருக்கிறார்கள் - பிரேமலதா
போனஸ் தொகைக்காக துயரத்தொடு காத்திருக்கும் நிலையை அதிமுக அரசு ஏற்படுத்தியுள்ளதாக தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்கள், ஒவ்வொரு தீபாவளியின் போதும் போனஸ் தொகைக்காக துயரத்தொடு காத்திருக்கும் நிலையை அதிமுக அரசு ஏற்படுத்தியுள்ளதாக தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தே.மு.தி.க தொழிற்சங்க பேரவை நிர்வாக ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேருந்து ஓட்டுநர்கள் மன உளைச்சலுக்கு தள்ளப்படுவதாலும், சாலைகள் சரியில்லாமல் இருப்பதாலுமே அதிக விபத்துகள் நடப்பதாக அவர் தெரிவித்தார்.