"அமைச்சர் வேலுமணியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" - ஸ்டாலின்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை விசாரணை நியாயமாக நடைபெற உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2018-09-10 13:46 GMT
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை விசாரணை நியாயமாக நடைபெற உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் 
வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. எம்.பி.ஆர்.எஸ். பாரதி அளித்துள்ள மனுவை சுட்டிக் காட்டியுள்ளார். லட்சக்கணக்கில் வணிகம் செய்த நிறுவனங்கள், பல கோடி ரூபாய் அளவுக்கு வணிகம் செய்யும் அளவுக்கு மாறி விட்டதாகவும், சென்னை மாநகராட்சி, 2500 கோடி ரூபாய் கடனில் மூழ்கி இருப்பதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்