ரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் நாங்கள் இல்லை - சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சி சார்பில் கல்விக் குறித்த கருத்தரங்கம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் நடைபெற்று வருகிறது.

Update: 2018-09-09 12:42 GMT
கருத்தரங்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கருத்தரங்கில் பேசிய சீமான், தமிழ் தாய் மொழி பாடம் என்றது போய், தமிழ் விருப்ப பாடமாக மாறிவிட்டதாக கூறினார். ரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் தாங்கள் இல்லை என்றும் போராட்டத்தை ரசிப்பவர்கள் என்றும் குறிப்பிட்டார். ரஜினி இனம் மாறுவது ஆளவா? என கேள்வி எழுப்பிய அவர், உயிரை கொடுத்தேனும் அதை தடுப்போம் என்றும் கூறினார். அப்போது ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்டதாகவும், இப்பொது ஆங்கிலம் நாட்டை ஆண்டு கொண்டு இருப்பதாகவும் சீமான் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்