திமுக தலைவர் ஸ்டாலின் புகார் : அமைச்சர் வேலுமணி பதில்

அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மையாக திகழ்வதை பொறுத்து கொள்ள முடியாமல் அரசு மீது அவதூறு பரப்பி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது அமைச்சர் வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2018-09-01 03:06 GMT
அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மையாக திகழ்வதை பொறுத்து கொள்ள முடியாமல் அரசு மீது அவதூறு பரப்பி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது அமைச்சர் வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்மார்ட் சிட்டி சீர்மிகு நகரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். கெல்ட்ரான் நிறுவனத்தின் ஒப்பந்த புள்ளியில் எந்த உண்மையையும் தெரிந்து கொள்ளாமல், குறை கூற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வழக்கம் போல் காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின் குற்றஞ்சாட்டியதாக அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார். நிர்வாக காரணங்களால், ஐ.ஏ.எஸ் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டதை, அறிக்கைக்கு சாட்சியாக எடுத்துக் காட்டுகின்ற ஸ்டாலின் செயல் மிகவும் தரக் குறைவானது என அவர் புகார் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி காலத்தில் ஒப்பந்தப்புள்ளி நடைமுறையில் பேக்கேஜ் சிஸ்டம் முதன்முதலாக கடைபிடிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை ஸ்டாலின் மறந்து விட்டார் என்றும் அமைச்சர் வேலுமணி குறிப்பிட்டுள்ளார். உள்ளாட்சி, வேளாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்வதை பொறுத்து கொள்ள முடியாமல் அரசு மீது ஸ்டாலின் அவதூறு பரப்புவதாகவும் அதனை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், அமைச்சர் வேலுமணி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்