"இன்னும் எத்தனை காலம் பதவியில் நீடிப்பேன் என்று தெரியாது" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி

இன்னும் எத்தனை காலம் பதவியில் நீடிப்பேன் என்று தெரியாது என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-08-26 13:16 GMT
கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம்  கூட்டணி ஆட்சி நடந்து  வருகிறது. முதலமைச்சரான குமாரசாமி சமீப காலங்களில் தெரிவித்து வரும் கருத்துகள் அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் குமாரசாமி இன்னும் எத்தனை காலம் பதவியில் தான் நீடிப்பேன் என்று தெரியாது என குறிப்பிட்டார். 

செப்டம்பர் 3 ல் கர்நாடகாவுக்கு புதிய முதலமைச்சர் பொறுப்பேற்கவிருப்பதாக வெளியாகும் செய்திகளை சுட்டிக்காட்டிய குமாரசாமி தனக்கு ஒருபோதும் கவலையில்லை என்றும் முதலமைச்சர் நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்ள நேரத்தை வீணாக்க மாட்டேன் என்றும் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்