"தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து தண்டிக்கிறது" - அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் வேணுகோபால் குற்றச்சாட்டு

நிதி வழங்குவதில் தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து தண்டிப்பதாக அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-10 02:18 GMT
நிதி வழங்குவதில் தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து தண்டிப்பதாக அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், உத்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களுக்கு, மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார். ஆனால், வளர்ந்த மாநிலமான தமிழகத்திற்கு குறைவான நிதியை  வழங்கி உள்ளதாகவும் இது, தமிழகத்தை தண்டிப்பது போன்றது எனவும் வேணுகோபால் கூறினார்.  
Tags:    

மேலும் செய்திகள்