ஆண் நண்பரை நம்பி கேரளா சென்ற பெண்ணுக்கு கண் முன் நடந்த கொடூரம்

Update: 2024-01-08 02:15 GMT

திருவனந்தபுரம் அருகே வர்க்கலா கடற்கரையில் உள்ள குன்றின் மீதிருந்து சுமார் 30 அடி பள்ளத்தில், இளம்பெண் ஒருவர் குதித்து படுகாயமடைந்தார். இதனைக் கண்ட அப்பகுதியினர், இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியபோது, நெல்லையை சேர்ந்த ஆண் நண்பர் தினேசன் என்பவருடன் வர்கலாவுக்கு வந்ததாகவும், அங்கு குளிர்பானத்தில் போதைபொருளை கலந்து கொடுத்து, 4 நாட்களாக நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்தார். இதனல் ஏற்பட்ட மனவேதனையில் தற்கொலை செய்யும் திட்டத்துடன் குன்றின் மீதிருந்து பள்ளத்தில் குதித்ததாகவும் கூறினார். முக்கிய நபரான தினேசன் தலைமறைவாகிய நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய வசந்த் மற்றும் காந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்