எதிர்பார்க்காத நேரத்தில் பெய்த கனமழை... மண்ணிற்குள் புதைந்து போன வீடுகள்

Update: 2024-01-31 04:47 GMT

பெரு நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, பல வீடுகள் மண்ணில் புதைந்தன. மத்திய கடலோரப் பகுதியில் உள்ள ஹவுரல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், வீடுகளும் மண்ணில் புதையுண்டன. இதையடுத்து, உள்ளூர் மக்கள், மண்வெட்டியுடன் களத்தில் இ றங்கி, வெள்ள நீரை பாதை திருப்பி விட்டனர். இதற்கிடையில், லா ஒரோயா, ஜூனினி உள்ளிட்ட பகுதியில், பெருக்கெடுத்த வெள்ளம், பாலத்தை மூழ்கடித்தது. மேலும், சஞ்சமயோ பகுதியில், மழை வெள்ளத்தில் சிக்கிய பேருந்தை பொதுமக்கள் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்