திருப்பதி தேவஸ்தானம் சொன்ன தகவல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 5 கோடியே 48 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 69,314 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக 12 மணி நேரம் வரை இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.