மனதை உலுக்கிய தீவிரவாத தாக்குதல்...15 ஆண்டுகளாகியும் ஆறாத வடு..கனத்த இதயத்தோடு CM அஞ்சலி | Thanthitv

Update: 2023-11-26 08:11 GMT

மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் 15ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, காவலர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தின் 15ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, மும்பை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில், மகாராஷ்ட்ர ஆளுநர் ரமேஷ் பயாஸ், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்