104 அடி உயரத்தில் பறந்த தேசிய கொடி.. மெய்மறந்து ரசித்த சுற்றுலா பயணிகள்

Update: 2023-11-22 09:33 GMT

வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில், 104 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. குப்வாரா மாவட்டம் டீத்வாலில் உள்ள கர்னா பள்ளத்தாக்கு, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்பகுதியை மேம்படுத்த, சமூக அமைப்புகளுடன் இந்திய ராணுவம் ஒன்றிணைந்துள்ளது. டீத்வால்-சிலியன் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே, 104 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி திரங்கா கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்