கேரள நீதித்துறைக்கே வந்த காய்ச்சல்..அடுத்தடுத்து படுக்கையில் விழுந்ததால் அதிர்ச்சி

Update: 2023-11-03 17:00 GMT

கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தலச்சேரியில், நீதிபதி உட்பட ஊழியர்கள் பலருக்கு காய்ச்சல் பரவி வருவதால் நீதிமன்றம் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டது. தலசேரியில் இயங்கி வரும் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களாக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து வழக்கறிஞர்கள், ஊழியர்கள் என சுமார் 50 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் மருத்துவக்குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு தினங்களுக்கு நீதிமன்றம் மூடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்