சட்டீஸ்கரில் இருசக்கர வாகனத்தில் முதலமைச்சர் பூபேஷ் பாகல் சென்று பரப்புரையை தொடங்கியுள்ளார். நம்பிக்கை பயணம் என்ற பெயரில் துர்க் நகரில் தொடங்கப்பட்ட இந்த இருசக்கர பேரணியில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர். 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு முதலமைச்சர் பூபேஷ் பாகல் இருசக்கர வாகனத்தில் சென்று பரப்புரை செய்தார். இதே போன்று, 90 தொகுதிகளில், இந்த நம்பிக்கை பயணம் நடைபெற்றது. அதே நேரத்தில், மாற்றத்திற்கான பயணம் என்ற பெயரில், பாஜகவினரும் பரப்புரையை தொடங்கியுள்ளதால், அம்மாநிலத்தில் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.