பலத்த சத்தத்துடன் வெடித்து எரிந்த கார்...ஓட்டுநர் தீயில் கருகி பலி - அதிகாலையில் நேர்ந்த பயங்கரம்

Update: 2023-08-07 17:11 GMT

பலத்த சத்தத்துடன் வெடித்து எரிந்த கார்...ஓட்டுநர் தீயில் கருகி பலி - அதிகாலையில் நேர்ந்த பயங்கரம்

கேரளாவில், கார் தீப்பற்றி எரிந்ததில் அதன் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார். கேரள மாநிலம், கண்டியூர் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ண பிரகாஷ். இன்று அதிகாலை இவர் தனது காரை வீட்டிற்குள் நிறுத்திய போது திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து, கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில், காரில் இருந்த கிருஷ்ண பிரகாஷ் வெளியேற முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தார். தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்து, அவரது சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்