`பிரஜ்வால் ரேவண்ணா வழக்கு' - 700 பெண்கள் புகார்?

Update: 2024-05-10 02:47 GMT

பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் புகார்கள், கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பிரஜ்ஜவல் ரேவண்ணா வழக்கில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து புகார்கள் எதுவும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையத்திற்கு 700 பெண்கள் புகார் அளித்துள்ளனர் என்பது தவறான தகவல் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை, பாலியல் துஷ்பிரயோகத்தை கண்டிப்பதில் உறுதியுடன் இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில், கர்நாடக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், வழக்கில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து கவனித்து வருவதாகவும் தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்