மனைவியுடன் ஏழுமலையானை தரிசித்த ஆளுநர் ஆர்.என்.ரவி | Andhra Pradesh | Tirupati | RN Ravi
திருப்பதி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏழுமலையானை தரிசனம் செய்தார். வாரந்தோறும் செவ்வாய்கிழமையில் 108 தங்கத் தாமரைகளைக் கொண்டு ஏழுமலையானுக்கு செய்யப்படும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவையில் வழிபாடு செய்தார். தொடர்ந்து ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள், ஆளுநருக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். கோவில் வேத பண்டிதர்கள் ஆளுநர் தம்பதிக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.