கோர்ட் படியேறிய உதயநிதி... 5 மாநில அரசுகளுக்கு பறந்த உத்தரவு - சுப்ரீம் கோர்ட் அதிரடி

Update: 2024-05-10 11:38 GMT

சனாதன ஒழிப்பு பேச்சுக்கு எதிரான வழக்குகளை ஒன்றிணைக்க கோரிய அமைச்சர் உதயநிதியின் ரிட்மனுவுக்கு 5 மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சனாதன பேச்சு விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க கோரிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உதயநிதி ஸ்டாலினின் திருத்தப்பட்ட ரிட் மனு தொடர்பாக மனுவுக்கு பதில் அளிக்க மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகம் ஆகிய மாநில அரசுகளும் புகார்தாரர்களும் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்