டியூஷனுக்கு சென்ற மழலை.பாலியல் கொடுமை செய்ததாக கிளம்பிய பகீர்..படையெடுத்த மக்கள்..போர்க்களமான டெல்லி

Update: 2024-03-25 02:32 GMT

டியூஷனுக்கு சென்ற மழலை...

பாலியல் கொடுமை செய்ததாக கிளம்பிய பகீர்

கண்டும் காணாமல் இருந்தது காவல் துறையா?

படையெடுத்த மக்கள்.. போர்க்களமான டெல்லி

டெல்லியில் 4 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் பாண்டவ் நகர், டியூஷனுக்கு சென்ற 4 வயது சிறுமியை 34 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. ஆனால் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், சிறுமி கவலைக்கிடமாக நிலையில் இருப்பதாகவும் தகவல் பரவியதால், பொதுமக்கள் ஆத்திரமடைந்து வீதியில் இறங்கி போராட்டதிதல் ஈடுபட்டனர். கார்களை உடைத்து சேதப்படுத்தியதுடன், குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி கோஷமிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறிய காவல் துறை இணை ஆணையர் அபூர்வா குப்தா, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் நலமுடன் இருப்பதாக கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்