ஒரே போன் கால் - ரூ.4.10 லட்சம் அபேஸ்

Update: 2023-10-28 10:22 GMT

புதுச்சேரியில், வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறி, ஓடிபி எண்ணை பெற்று, முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் எடுத்து மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி நகர பகுதியான அரவிந்தர் வீதியை சேர்ந்த வைத்தியநாதன் என்ற முதியவர், தனியார் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவரது செல்போன் எண்ணை தொடர்புகொண்ட மர்மநபர், வங்கிக் கணக்கு காலாவதியாக போவதாகக் கூறி ஓடிபி பெற்று மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்