"சித்தராமையாவின் நாற்காலி தேர்தலுக்குப் பின் முறிந்துவிடும்"சதானந்தகவுடா பேச்சால் அரசியலில் பரபரப்பு

Update: 2024-04-16 03:04 GMT

"சித்தராமையாவின் நாற்காலி தேர்தலுக்குப் பின் முறிந்துவிடும்" பா.ஜ.க. எம்.பி சதானந்தகவுடா பேச்சால் அரசியலில் பரபரப்பு

#karnataka #bjp #thanthitv

கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவக்குமாரின் நாற்காலிகளில் இருந்த நான்கு கால்கள் 3 கால்களாக மாறி இருப்பதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அந்த நாற்காலி முறிந்துவிடும் என பாஜக எம்.பி சதானந்தகவுடா கூறியிருப்பது கர்நாடக அரசியல்களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆபரேஷன் கமலா மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அரசை கவிழ்க்க பா.ஜ.க. திட்டமிட்டு வருவதாக சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் பா.ஜ.க. மீது குற்றச்சாட்டியிருந்த நிலையில், தற்போது சதானந்தகவுடாவின் பேச்சு அதை உறுதிபடுத்துவதுபோல உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்