சிக்கிய ரூ.22 லட்சம் ஈ-சிகரெட் - ஆந்திராவை உலுக்கிய கடத்தல்

Update: 2024-03-26 05:14 GMT

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஈ-சிகரெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாகப்பட்டினத்தில் உள்ள கடைகளில் ஈ சிகரெட் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை நடத்தியதில், சுமார் 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 743 ஈ சிகெரட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்