கேரளாவில் 2 அமைச்சர்களின் ராஜினாமா ஏற்பு | Kerala

Update: 2023-12-27 07:55 GMT

கேரளாவில் இரண்டு அமைச்சர்களின் ராஜினாமை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். கேரளாவை ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டத்தில், 5 ஆண்டுகள் அமைச்சரவையில் இரண்டரை ஆண்டுகள் ஒருவர் அமைச்சராகவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் மற்றொருவர் அமைச்சராகவும் இருப்பது என முடிவெடுத்தனர். இதன்படி காங்கிரஸ் எஸ் கட்சியின் அமைச்சராக அகமது தேவர்கோவில், காங்கிரஸ் பி கட்சி சார்பில் ஆண்டனி ராஜா ஆகியோர் அமைச்சர்களாகினர். இவர்கள் பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களுக்கு பதிலாக ராமச்சந்திரன் கடனப்பள்ளி, கணேஷ்குமார் ஆகிய இருவரும் வரும் 29-ந்தேதி அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்