பாய்ண்ட்டை பிடித்த ராகுல்.. கவுன்ட்டர் அட்டாக் செய்வாரா மோடி?

Update: 2024-04-24 06:24 GMT

தனது கோடீஸ்வர நண்பர்களுக்காக, 16 லட்சம் கோடி ரூபாய் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்...

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மோடி தள்ளுபடி செய்த பணத்தின் மூலம் 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய் வருமானத்தில் வேலை கொடுத்திருக்கலாம் எனவும், 16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய் வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதேபோல், 10 கோடி விவசாயக் குடும்பங்களின் கடன்களை தள்ளுபடி செய்திருந்தால், எண்ணற்ற தற்கொலைகளை தடுத்திருக்கலாமெனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியர்களின் வலிக்கு மருந்தாகக் கூடிய பணம், அதானிகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள ராகுல் காந்தி, மோடியின் இந்தக் குற்றத்தை நாடு ஒரு போதும் மன்னிக்காது எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்