புதுச்சேரியில் ரூ.1000 பொங்கல் பரிசுத்தொகை - ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

Update: 2024-01-10 13:42 GMT

புதுச்சேரியில் பழங்குடி மக்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுத்தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் வசிக்கும் அட்டவணை மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் மொத்தம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 628 பயனாளிகள் பயன்பெற உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்